News January 18, 2026
நெல்லை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரி (18) தனது நண்பர் பாலாஜியை சந்திக்க சி.என் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாலாஜி, டவுனை சேர்ந்த பாஞ்சாலராஜன் என்பவரின் மாமியாரிடம் தான் கொடுத்த கடனை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஞ்சாலராஜன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் பாஞ்சாலராஜனை கைது செய்தனர்.
Similar News
News February 5, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.5) இரவு ரோந்து பணிகளில் கணேசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News February 5, 2026
நெல்லை புத்தக திருவிழா தேதி மாற்றம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 115 அரங்குகளுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பதாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா வரும் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு புத்தகத் திருவிழா வரும் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
News February 5, 2026
நெல்லை: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


