News February 13, 2026

நெல்லை இளைஞரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண்கள்

image

நெல்லையை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரிடம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி, சரோஜினி ஆகிய இருவரும் அரசின் சுகாதார துறையில் அஜித்குமாருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.8,00,000 பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளனர். அஜித்குமார் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரோஜினி, ராஜலட்சுமி ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர்.

Similar News

News February 16, 2026

திருநெல்வேலி: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா?

image

TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??

1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க

2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.

3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.

இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க.

தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க. யூஸ் ஆகட்டும் 🙂

News February 16, 2026

திருநெல்வேலி: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

image

திருநெல்வேலி மக்களே; நீங்க வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடிக்கும்போது அடுத்து வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். SHARE பண்ணுங்க

News February 16, 2026

திருநெல்வேலி: ரூ.3 லட்சத்தை காப்பாற்றிய அரிசி டப்பா

image

கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டை பூட்டி வெளியே சென்ற போது இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புகுந்துள்ளனர். அங்கு பீரோவில் இருந்த ரூ.30,000 திருடு போனது. அதே நேரத்தில் அரிசி டப்பாவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் தப்பியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!