News December 30, 2025
நெல்லை: இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி

வள்ளியூரை சேர்ந்த அபிராமி (29) என்ற பெண் இன்ஸ்டாகிராமில் வந்த வீட்டிலிருந்து படி வேலை விளம்பரத்தை நம்பி அவர்கள் தெரிவித்த தகவல்களின்படி பல கட்டமாக ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் கட்டி ஏமாற்றம் அடைந்தார். இதுபோல் இடிந்த கரையைச் சேர்ந்த அஸ்வினி (33) என்பவர் ஆன்லைன் பகுதி நேர வேலை என்ற விளம்பரத்தை நம்பி ரூ.9,50,000 பறி கொடுத்துள்ளார். இருவரும் அளித்த புகாரை நெல்லை சைபர் க்ரைம் போலீசார் விசாரக்கின்றனர்.
Similar News
News January 1, 2026
நெல்லை மக்களே., இனி பத்திரப்பதிவு சுலபம்!

நெல்லை மக்களே, உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை CLICK செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 1, 2026
நெல்லை: இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த பேட்டையை சேர்ந்த இப்ராஹிம் ராசிக் (22) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இப்ராஹிம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து பாளை மத்திய தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
News January 1, 2026
நெல்லை: மது குடிக்க பணம் தராததால் தற்கொலை!

களக்காடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ராஜா (29). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கதிர்வேல் தனது தாயார் அருள் மாலாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அருள் மாலா பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து களக்காடு போலீஸார் விசாரனை.


