News March 24, 2025
நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு காவல் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி சரகத்தில் முன்னீா்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் காவல் பணியில் ஈடுபடுவார். அவரது கைபேசி தொடர்பு எண் 83000 71556. இதுபோல் நெல்லை ஊடகம் நெல்லை, ஊரகம், நாங்குநேரி வள்ளியூர், அம்பை, ஆகிய பகுதிகளுக்கும் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
நெல்லையை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விருது

திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசண்ண குமார், நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா ஆகியோர் நாங்குநேரி பகுதியில் இளைஞர்கள் திறன் மேம்பாடு, சமூக மாற்றத்திற்கு பணியாற்றியதற்காக இந்த ஆண்டின் தமிழக அரசின் நல்லாளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
News August 14, 2025
நெல்லை: பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை

கன்னியாகுமரியைச் சேர்ந்த தலைமை காவலர் சசிகுமார்(45), பாளையில் 15 வயது மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்டார். மாணவி பள்ளியில் “குட் டச், பேட் டச்” வகுப்பில் இது குறித்த உண்மையை வெளிப்படுத்தினார். பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஒன்ஸ்டாப் சென்டருக்கு தகவல் சென்று, புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் போலீசார் சசிகுமாரை கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது
News August 14, 2025
நெல்லை: நிதி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்டத்தில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பது வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விலைப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்து சந்தை அணுகுதலை எளிதாக்குதல் & விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த வேளாண்மை உள் கட்டமைப்பு நிதி வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிப்பு. *ஷேர்