News October 18, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.17] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News October 18, 2025

நெல்லை: வெள்ளம் பாதிப்புகள் புகார் எண்கள்!

image

நெல்லையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 18, 2025

நெல்லை: சிறையில் இருந்த முன்னாள் காவலர் உயிரிழப்பு!

image

குமரி மாவட்டம், தோவாளை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீசார் ஜோசப் ராஜ் (74), 1999ம் ஆண்டு தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வின்சென்ட் என்பவர் இறந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கபட்டிருந்தார். நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை.

News October 18, 2025

பார்வையற்ற மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி சேர்க்கை

image

பேட்டை அரசின் தொழில் பயிற்சி பள்ளி(ஐடிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் பயிற்சி பள்ளியில் பல தரப்பினரும் பயின்று வரும் நிலையில் மாற்றுத்திறன் மாணவர்களின் நலனுக்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, குறிப்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில் பயில்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்ற வருகிறது. வருகிற 30ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

error: Content is protected !!