News April 21, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
Similar News
News October 31, 2025
பாரதியார் பிறந்தநாள் போட்டிகளில் பரிசு பெற வாய்ப்பு

நெல்லை மாவட்ட பொதிகை தமிழ் சங்க நிறுவனர் கவிஞர் பே.ரா.விடுத்துள்ள செய்தி குறிப்பு: பொதிகை தமிழ் சங்கம் சார்பில் மாநில அளவிலான பாரதியார் பிறந்தநாள் கவிதை போட்டிகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் கவிதைகளை 36 வரிகளுக்குள் எழுதி வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் pothigaitamilsangam@gmail.com என்ற இணையதளத்தில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
News October 31, 2025
நெல்லை: நவம்பர் மாதம் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் படி நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 65 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரருக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறத. நவம்பர் மாதத்திற்கான இந்த சிறப்பு நிகழ்ச்சி வருகிற 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும். இதை தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு : நெல்லை மாவட்டத்தில் ஆயிரம் பெற்றேன் பரப்பளவில் மக்காச்சோளம் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கன் படைப்புழு பூச்சி தாக்கம் இருப்பதால் மகசூல் இழப்பீடு அதிகமாக இருக்கும். எனவே இதை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆழமாக நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவின் போது வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும் என தெரிவித்துள்ளார்.


