News December 24, 2025

நெல்லை: இனி உங்க பான் கார்டு செல்லாது?..

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News December 24, 2025

நெல்லையில் உச்சத்தை தொட்ட மல்லிகை விலை!

image

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை பூக்கள் மொத்த விற்பனை சந்தையில் மல்லிகை, பிச்சிப்பூக்கு இன்று திடீர் கிராக்கி ஏற்பட்டது. இன்று காலை, முதல் ஏலத்தில் பிச்சிப்பூ ஒரு கிலோ 1200 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாகவும், மல்லிகை பூ 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகவும் உயர்ந்து விற்பனையானது. இதனால் மானூர் பகுதி பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News December 24, 2025

நெல்லை: போஸ்ட் ஆபீஸில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம்!

image

தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆதார் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை நெல்லையிலும் உள்ளது. தகுதியானவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சார்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டது. SHARE IT

News December 24, 2025

நெல்லை: பணப் பறிப்பில் ஈடுபட்டவர் குண்டாஸில் கைது

image

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் மகாராஜன் என்பவரை பாளை இரயில் நிலையத்தில் மிரட்டி, பணம் பறித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அன்பழகன் நேற்று போலீஸ் கமிஷனர் சந்தோஸ் ஹாதிமணி உத்தரவில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!