News May 7, 2024

நெல்லை: ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

image

நெல்லை டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நேற்று சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

நெல்லை: பட்டபகலில் அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை

image

பழைய பேட்டை சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார். போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று பகலில் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது மாடியின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 17 பவுன் நகை, ரூ.25,000 கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News January 30, 2026

JUST IN நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தைப்பூச பண்டிகை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இன்று(ஜன.30) இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. நாளை காலை 11:15 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் பிப்.1 அன்று இரவு 10:35 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

News January 30, 2026

நெல்லை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். நெல்லை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!