News December 26, 2025
நெல்லை: ஆட்டோ டிரைவர் திடீர் தற்கொலை!

கொக்கிர குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அந்தோணி இருதயம் (35). இவர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தபோது, அவரது உறவினர் பணம் கேட்டு தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. விரக்தியில் இருந்த அவர் வீட்டில் நள்ளிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 31, 2025
நெல்லை: 359 பேர் போக்சோவில் கைது!

நெல்லை மாவட்டத்தில் எஸ்.பி சிலம்பரசன் உத்தரவிபேரில், இந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம்; மாவட்டத்தில் குழந்தை திருமணம் உள்ளிட்டு 235 போக்சோ வழக்குகளும், மாநகரில் 74 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 359 பேர் மீது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
நெல்லை: வீடு கட்ட அரசு தரும் SUPER ஆஃபர்

நெல்லை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 31, 2025
நெல்லை: கோர விபத்தில் பலி., சிதறிய உடல்!

நாங்குநேரியை பகுதியில் நெல்லை நான்கு வழிச்சாலையில் நேற்று முன் தினம் இரவு, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஆண் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அவரது உடல் மீது ஏறி சென்றதால் உருக்குலைந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து வந்த நாங்குநேரி போலீஸார் அவரது உடல் பாகங்களை மீட்டு நெல்லை GH-க்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


