News September 20, 2025
நெல்லை: ஆட்டோவை திருடி சென்ற நபர் சுற்றி வளைப்பு

வண்ணாரப்பேட்டை பரணி நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் நேற்றிரவு நெல்லை டவுன் ஸ்ரீ புரத்தில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று உள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது ஆட்டோவை ஒருவர் எடுத்து செல்வதை பார்த்துள்ளார். உடனடியாக தனது நண்பர்களுக்கு தகவல் கூறியுள்ளார். வண்ணார்பேட்டையில் வைத்து அவரது நண்பர்கள் ஆட்டோவை மடக்கி பிடித்து ஆட்டோவை திருடி சென்ற நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 11, 2025
நெல்லை அரசு பஸ் டிரைவர்களுக்கு நிர்வாகம் அறிவுரை

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதால் அரசு ஓட்டுநர்கள் பயணிகள் பாதுகாப்பு கருதி கவனமுடன் பஸ்களை இயக்க வேண்டும் என நெல்லை அரசு போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மழை நேரத்தில் சுரங்கப்பாதையில் நீர் தேங்கி இருந்தால் மாற்று பாதையில் செல்ல வேண்டும். தரைப்பாலங்களுக்கு மேல் தண்ணீர் செல்லும் போது அந்தப் பாதையில் பஸ்சை இயக்க கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினர்.
News November 11, 2025
நெல்லையில் 6 இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம், ஐ என் எஸ் கட்டபொம்மன், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஆறு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தியுள்ளார். நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரவு ரோந்து பணியில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
News November 11, 2025
திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரூம் அதிகாரிகள் நியமிப்பு

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டு வகையிலும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரோந்து அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி நியமித்துள்ளார். திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகாரிகள் ரோந்து பணிகளையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்


