News November 25, 2024

நெல்லை: அலட்சியமாக செயல்பட்ட பேரூராட்சிக்கு அபராதம்!

image

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே முத்தையா தெருவை சேர்ந்தவர் அஜித் சிவராஜா(42). இவர், வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக பேரூராட்சியை அணுகியுள்ளார். அங்கு அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான அஜித் சிவராஜாவுக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ.7,000 ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Similar News

News August 21, 2025

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை சிறப்பு ரயில்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை – மைசூர் இடையே பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம். நெல்லையிலிருந்து 27ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு மைசூரை அடையும். மைசூரிலிருந்து 26ம் தேதி இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News August 21, 2025

புதிய பண மோசடி; நெல்லை எஸ்பி எச்சரிக்கை

image

வங்கி மேலாளர் எனக் கூறி பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்கள் ஓடிபி குறித்து மக்கள் கூறக்கூடாது. புதிய பிக்சட் டெபாசிட் லோன் சம்பந்தமான ஏ.பி.கே பயில்களை மொபைலில் பதிவிறக்கம் செய்ய கூடாது. போலி அழைப்புகளை உடனே துண்டித்து வங்கி கிளைக்கு சென்று உறுதி செய்ய வேண்டும். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 டோல் ஃப்ரீ எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என நெல்லை எஸ்.பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். *SHARE IT

News August 21, 2025

BREAKING: நள்ளிரவில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

image

மேலப்பாளையம் மேல கருங்குளத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி அருள்தாஸ், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று இரவு மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணென்ணையை பறிமுதல் செய்தனர். எங்கள் ஊரில் சாதி ரீதியாக எங்கள் குடும்பத்தை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கின்றனர் என அருள்தாஸ் போலீசாரிடம் கூறினார்.

error: Content is protected !!