News December 27, 2025

நெல்லை: அரிவாளால் காதை வெட்டிய போலீஸ்

image

திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் கான்ஸ்டபிள் டைசன் துரை(38) கிறிஸ்துமஸ் மதுவிருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சகலையான மெர்லின்(32) மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளார். மெர்லினின் நண்பர்களிடம் சாதி குறித்து கேள்வி எழுந்ததில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மெர்லினுக்கு காதுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டைசன் துரை தலைமறைவாக உள்ளார்.

Similar News

News December 27, 2025

திசையன்விளையில் வித்தியாசமான வாழைப்பழம்

image

திருநெல்வேலி மாவட்டம் பல்வேறு இடங்களில் வாழை பயிரிடப்பட்டு உள்ள நிலையில் திசையன்விளையில் விவசாயி தன் தோட்டத்தில் விளைந்த வித்தியாசமான வாழை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே வாழைத்தாரில் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் வாழைப்பழம் காணப்பட்டதால் பொதுமக்கள் உடனடியாக போட்டி போட்டு அவற்றை வாங்கி சென்றனர்.

News December 27, 2025

நெல்லை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!