News September 18, 2025

நெல்லை அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்

image

ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவர்கள் இன்று காலை ஒருவரை ஒருவர் தாக்கி கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்த நிலையில் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் மாணவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 3, 2026

திருநெல்வேலி: மாதம் ரூ.3,000 ..! இந்த கார்டு உள்ளதா?

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 3, 2026

நாங்குநேரி கொலை தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

image

நேற்று நான்குநேரியில் இரண்டு பேர் அருவாளால் வெட்டி படுகொலை நடந்தது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பாளையம்கோட்டை எஸ் பி அலுவலகத்தில் நடை பெற்று வருகிறது. காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சட்டம் ஒழுங்கு மகேஸ்வர் தயாள், தென் மண்டல காவல்துறை தலைவர் ஐஜி விஜயேந்திர பிதாரி திருநெல்வேலி சரக டி ஐ ஜி சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தலைமையில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

News March 3, 2026

நெல்லை: பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? – விஜய்

image

நாங்குநேரி அருகே 9 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறித் தாக்குதலை கண்டித்து, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகவும், திமுக ஆட்சியை மக்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிராகரிப்பார்கள் எனவும் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு.

error: Content is protected !!