News March 23, 2025
நெல்லை:விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலமாக நெல்லை மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 12 நகர் நல மையங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க நாளை (மார்-24) கடைசி தேதி.11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. 12 மருத்துவ அலுவலர்கள், 12 நர்சுகள், 12 ஊழியர்கள் பணிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ8500 முதல் 60,000 வரை சம்பளம். விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News April 20, 2025
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வெல்டிங் கட்டுமானப்பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 வரை வழங்கப்படுகிறது. ITI படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-21, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
News April 20, 2025
நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகளான டானிக் பாட்டில்கள் போன்றவை பொதுக் கழிவுகளுடன் சேர்ந்து எரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து நேற்று மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் குப்பைகளை முறையாக கையாள வேண்டும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.
News April 20, 2025
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 139 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <