News April 29, 2025
நெல்லையில் 29 சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே ஜாதி ரீதியாக கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு மாவட்ட மற்றும் மாநகரப் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜாதி ரீதியாக பதிவு வெளியிட்ட 29 சமூக வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜனவரியில் இருந்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 29, 2025
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக எம்எல்ஏ நியமனம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மர்ம மரணம் குறித்து சிபிசிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி கடந்த சில மாதங்களாகவே காலியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டியின்றி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
News April 29, 2025
நெல்லை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எண்கள்

நெல்லை மாவட்ட மக்களே மாவட்டத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளவும்.
▶️அம்பாசமுத்திரம் – 7402608463
▶️ களக்காடு – 7402608482
▶️சேரன்மகாதேவி – 7402608467
▶️மானூர் – 7402608448
▶️நாங்குநேரி – 7402608478
▶️பாளையங்கோட்டை – 7402608444
▶️பாப்பாக்குடி – 7402608471
▶️இராதாபுரம் – 7402608488
▶️வள்ளியூர் – 7402608485
இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News April 29, 2025
18 துணை தாசில்தார்களுக்கு திடீர் ட்ரான்ஸ்பர்

நெல்லை மாவட்டத்தில் நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார் சந்திரசேகர் நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை துணை தாசில்தார் முத்துலட்சுமி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதுபோல் மாவட்ட முழுவதும் மொத்தம் 18 பேர் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.