News October 9, 2025

நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை

image

நெல்லை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கிடையே நேற்று பிற்பகல் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் நாங்குநேரியில் 7.20 மில்லி மீட்டர் மழை கொடுமுடியார மாநகர பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பாளையங்கோட்டையில் 7 மில்லி மீட்டர் மழை மணிமுத்தாறில் 1.20 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

Similar News

News October 9, 2025

நெல்லை: ரூ.40,000த்தில் அரசு வேலை.. தேர்வு இல்லை.,

image

நெல்லை மக்களே, மாவட்ட சுகாதார சங்கத்தில் 42 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி 8th, 10th, B.Com, டிப்ளமோ, அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ40,000 வரை சம்பளம் வழங்கப்படும்; இதற்கு தேர்வு இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.14ம் தேதி. மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> செய்யவும்.

News October 9, 2025

நெல்லை மாநகர போலீசார் 10 பேர் இடமாற்றம்

image

நெல்லை மாநகரத்தில் பணியாற்றிய எஸ்ஐ, எஸ்எஸ்ஐ, ஏட்டுக்கள் உட்பட 10 காவலர்களை நெல்லை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்து டிஐஜி சந்தோஷ் ஹதிமாணி உத்தரவிட்டார். மாற்றம் செய்யப்பட்டவர்களில் தச்சநல்லூர் எஸ்ஐ ரமேஷ் மணிகண்டன், பாளை எஸ்எஸ்ஐ சீனிவாசன், மாநகர போக்குவரத்து எஸ்எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அடங்குவர். புதிய பணியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

News October 9, 2025

திருநெல்வேலி: மழை குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் குறித்த தகவல்களுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 மூலம் தொடர்பு கொள்ள முடியும். மேலும் 9786566111 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!