News October 3, 2025
நெல்லையில் வெயில் 100

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று 103.1 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. தமிழகத்தில் நேற்று பாளையங்கோட்டையில்தான் அதிகபட்ச வெயில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மக்களே இனி எங்க போனாலும் குடையை மறக்காதீங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News October 3, 2025
நெல்லை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க..
News October 3, 2025
நெல்லை போலீசார் அதிரடி – 105 பேர் கைது

நெல்லை போலீஸ் சுப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளாதவது: சாதி சார்ந்த பிரச்னைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் சாதிய உணர்வுகளை தூண்டி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது. ஆபத்தான ஆயுதங்களை காட்டும் பதிவுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கபட்டு 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 பேர் கைது செய்யபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
News October 2, 2025
தர்ப்பூசணி பழத்தில் காமராஜர் காந்தி படம்; கலைஞர் அசத்தல்

மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று ஒரே நாளில் வருகிறது. எனவே இரு தலைவர்களுக்கும் அரசியல் பிரமுகர்கள் மரியாதை செய்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் செல்வகுமார் நூதன முறையில் தர்ப்பூசணி பழத்தில் காமராஜர் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவரின் உருவங்களை ஓவியமாக வரைந்து மரியாதை செலுத்தியுள்ளார்.