News July 6, 2025

நெல்லையில் வாகனங்கள் உரிமை கோராவிட்டால் ஏலம்

image

நெல்லையில் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமையாளர்கள் ஆவணங்கள், ஆதார் அட்டையுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆஜராகி, அபராதம் செலுத்தி வாகனங்களை மீட்கலாம். உரிமை கோரப்படாவிட்டால், வாகனங்கள் ஏலம் விடப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 13, 2025

நெல்லை: வேன் கவிழ்ந்து விபத்து; இருவர் பலி

image

இன்று கன்னியாகுமரி சென்று விட்டு பாட்டபத்து பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று நாங்குநேரி அருகே வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்குநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 13, 2025

நெல்லை: PF பிரச்சனைகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தீர்வு

image

நெல்லை மக்களே, உங்களின் PF கணக்குகளில் பிரச்சனை உள்ளதா? உங்க பேலன்ஸ் எவ்வளவுன்னு தெரியலையா?? இதற்காக அடிக்கடி PF லிங்கை திறந்து பாக்குறீங்களா இனி அது தேவை இல்லை! நமது தென்காசி மாவட்டத்திற்கு என பிரத்யேக 9489987157 வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பி PF பேலன்ஸ், பணம் எடுத்தல், PF பிரச்சனைகள் குறித்த சேவைகள் மேற்கொள்ளலாம். உங்க புகாரை நெல்லை PF அதிகாரிகளிடம் நேரடியாக பேசி தீர்வு காணலாம். SHARE பண்ணுங்க

News November 13, 2025

நெல்லை: ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

image

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பொட்டல் காலனியில் கடந்த 2017ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக வெற்றிவேல் என்பவரை கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில் மாரிமுத்து, ஜெகதீஷ், சீதாராமன், ஈஷா மற்றும் சுடலைமாடி ஆகிய 5 பேரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் தீர்ப்பளித்து 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

error: Content is protected !!