News October 5, 2024

நெல்லையில் ரூ.10 லட்சம் மோசடி செய்த போலீஸ்!

image

நெல்லை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலக தலைமை காவலர் முருகராஜ்(41), V.K.புதூர் பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்மதி, மதுரையில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றுகிறார் எனக்கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். நெல்லை சந்திப்பு போலீசார் வழக்கு பதிந்து முருகராஜ் & வளர்மதியை கைது செய்துள்ளனர்.

Similar News

News August 28, 2025

நெல்லை வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000476, 9445000477 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News August 28, 2025

நெல்லையில் அரசு வேலை…நாளை கடைசி… APPLY NOW!

image

நெல்லையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 44 (15+29) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக.29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே<> கிளிக்<<>> செய்யப்வும். ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தேவையில்லாத செயலிகள்; மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் வாயிலாக பண மோசடி அதிக அளவு நடைபெறுகிறது. எனவே மொபைலில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். தேவையில்லாத லிங்க்கை ஓபன் செய்ய வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!