News March 19, 2024
நெல்லையில் மீண்டும் சாதிய தாக்குதல்

தாழையூத்து செல்வன் நகர் பகுதியைச் சேர்ந்த வண்ணார் வகுப்பை சேர்ந்த 2 இளைஞர்களை அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியை சேர்ந்த ஒரு கும்பல் இன்று (மார்ச் 19) தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சுடலைமுத்து என்பவர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் சுடலைமுத்துவை சிபிஐ எம்எல் கட்சியினர் இன்று மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
Similar News
News October 30, 2025
நெல்லை: சினிமாவை மிஞ்சும் நூதன கொள்ளை

பேட்டை MGP பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காதர் பீவி என்பவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் பெண் ஒருவர் மகளிர் உதவித்தொகைக்கு கணக்கெடுப்பு நடப்பதாக கூறி விஏஓ அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கே கழுத்தில் உள்ள செயினை கழற்றி தன்னிடம் தந்துவிட்டு விசாரணைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி காதர் பீவி செய்துள்ளார். பின்னர் அந்த பெண் செயினுடன் தலைமறைவாகி விட்டார். புகாரின் பேரில் பேட்டை போலீசார் விசாரணை.
News October 30, 2025
நெல்லை: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

நெல்லை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க
News October 30, 2025
நெல்லை: லஞ்சம் பெற்ற 2 அதிகாரிகளுக்கு சிறை

திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த கோமதிநாயகம் 2009ல் வீடு கட்டி மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தார். உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வணிக உதவியாளர் உதயகுமார் ரூ.7500 லஞ்சம் கேட்டனர். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுப்பையா இருவருக்கும் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தார்.


