News April 28, 2024
நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Similar News
News February 13, 2026
நெல்லை : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News February 13, 2026
நெல்லையில் செயின் பறிப்பு…. மக்களே உஷார்….!

நெல்லை மாவட்டம் கீழப்பாட்டம் பஸ் ஸ்டாப் அருகே மூதாட்டி ஒருவர் நடந்து சென்றபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டியிடம் செயினை பறிக்க முயற்சி செய்தார். போலீஸ் விசாரணையில் மருதூரை சேர்ந்த உதயகுமார் (19) என்பவர் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுக்குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து உதயகுமாரை இன்று கைது செய்தனர்.
News February 13, 2026
நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.


