News October 8, 2025
நெல்லையில் பெட்ரோல் பங்க் சூறை

சேரன்மகாதேவி ஆர்.சி. நடுநிலைப் பள்ளி அருகில் கடையத்தை சேர்ந்த சைத்அலி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில், நேற்று முன்தின இரவு, அடையாளம் தெரியாத இருவர் டூவீலரில் வந்து, ஊழியர்களை மிரட்டி பைக்க்கு இலவச பெட்ரோல் கேட்டனர். மறுத்ததால், அரிவாளால் பங்கை சூறையாடி தப்பினர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 8, 2025
நெல்லை: NLCயில் 1,101 காலியிடங்கள்! உடனே APPLY

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 1101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் 21.10.2025 ம் தேதிக்குள் இங்கே <
News October 8, 2025
நெல்லை: நீதிபதி மீது காலணி வீசியவர் மீது வழக்கு

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில், திருட்டு வழக்கில் கைதான மத்தியபிரதேசத்தை சேர்ந்த திரேந்தர் சிங் (29), நீதிபதி அருண்சங்கரை நோக்கி காலணி வீசினார். காலணி நீதிபதியின் கணினியில் பட்டு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல்கள் அவரைப் பிடித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, திரேந்தரை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து அவர் மீது போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
News October 8, 2025
நெல்லை: + 2 மாணவர் மீது தாக்குதல்

திசையன்விளை அருகே தெற்கு ஏராந்தையை சேர்ந்த பொன் பிரதீப் (17) மீது, நாகராஜ் (19) மற்றும் 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளின் அதிக ஒலிக்காக கண்டிக்கபட்டதால் ஆத்திரமடைந்த நாகராஜ் இந்த தாக்குதலை நடத்தினார். காயமடைந்த பொன் பிரதீப் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திசையன்விளை போலீசார் நாகராஜ் உட்பட 4 பேரை கைது செய்து, 5 பேரை தேடி வருகின்றனர்.