News April 13, 2024
நெல்லையில் நாளை அதிசய நிகழ்வு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட கணபதி திருக்கோவிலில் நிர்வாகம் இன்று (ஏப்.13) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை காலை 6 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு நடைபெற இருககிறது . முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 5 மணிக்கு நடைபெறும் இன்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News November 9, 2025
நெல்லையில் பணம் பறித்த 81 பேர் கைது

செல்போன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களை தனியாக வரவழைத்து பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 10 மாதங்களில் 81 பேரை கைது செய்துள்ளனர்.செல்போன் செயலிகளை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் தனிமையில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் சுய விவரங்களை தெரியாதவர்களுடன் பகிர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
News November 8, 2025
இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்திமணி உத்தரவுபடி திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது கைபேசி விபரங்கள் மாநகர காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவசர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
News November 8, 2025
பொங்கல் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் படி சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வருவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு 11ம் தேதி முதல் காலை 8 மணிக்கு துவங்குகிறது. *SHARE


