News May 12, 2024
நெல்லையில் கோர விபத்து; இருவர் மரணம்

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இன்று (மே12) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணமடைந்தனர். சங்கர்நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் லாரியின் பின்புறம் வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
நெல்லை அரசு பஸ் டிரைவர்களுக்கு நிர்வாகம் அறிவுரை

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதால் அரசு ஓட்டுநர்கள் பயணிகள் பாதுகாப்பு கருதி கவனமுடன் பஸ்களை இயக்க வேண்டும் என நெல்லை அரசு போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மழை நேரத்தில் சுரங்கப்பாதையில் நீர் தேங்கி இருந்தால் மாற்று பாதையில் செல்ல வேண்டும். தரைப்பாலங்களுக்கு மேல் தண்ணீர் செல்லும் போது அந்தப் பாதையில் பஸ்சை இயக்க கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினர்.
News November 11, 2025
நெல்லையில் 6 இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம், ஐ என் எஸ் கட்டபொம்மன், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஆறு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தியுள்ளார். நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரவு ரோந்து பணியில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
News November 11, 2025
திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரூம் அதிகாரிகள் நியமிப்பு

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டு வகையிலும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரோந்து அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி நியமித்துள்ளார். திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகாரிகள் ரோந்து பணிகளையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்


