News October 10, 2025
நெல்லையில் கல்லூரிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் செயல்படும் பி.எஸ்.என்., தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் குடிநீர் மாசுபாட்டால் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடிநீரை சீர் செய்யும் வரை அங்குள்ள 5 கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 10, 2025
நெல்லை: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப், அரசு உதவிகள் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் மையங்களில் இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க
News October 10, 2025
நெல்லை மாவட்ட மின்வாரியம் அறிவுறுத்தல்

நெல்லை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் சார்பில் மழைக்கால மின் விபத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இன்று (அக்டோபர் 10) விடுத்துள்ள செய்தி குறிப்பில் மின் மாற்றிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகள் அமைந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தால் அந்த நீரில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
News October 10, 2025
நெல்லையில் 2 தனிப்படை அமைத்து தேடப்படும் கைதி

கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த முத்துச்செல்வன்(34), கோவில்பட்டியில் தகராறில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டார். வயிற்றுவலி காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், கழிவறை செல்வதாக கூறி தப்பினார். பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர். நெல்லையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கோவில்பட்டி போலீசாரும் தேடுதல் நடத்துகின்றனர்.