News April 27, 2025

நெல்லையில் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட சாலை

image

நெல்லை சந்திப்பிலிருந்து சமாதானபுரம் வழியாக கேடிசி நகர் செல்ல இன்று முதல் முடியாது. சமாதானபுரத்திலிருந்து கோர்ட் வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சமாதானபுரத்திலிருந்து எஸ்.பி அலுவலகம் வழியாக கேடிசி நகர் செல்லலாம். கேடிசி நகரில் இருந்து சமாதானம் வருவதற்கு எந்த தடைகளும் கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 27, 2025

நெல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி 

image

நெல்லை மாவட்டம் நான்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் குழந்தை உள்பட4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஏர்வாடி போலீசார் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

News April 27, 2025

மயோனைஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை -ஆட்சியர்

image

நெல்லை கலெக்டர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தந்தூரி சிக்கன், சவர்மா போன்ற உணவுகள் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்துள்ளது. அதில் பயன்படுத்தப்படும் மயோனைஸ் கேடு விளைவிப்பதாக அதனை ஒரு ஆண்டுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே உணவு நிறுவனங்கள் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டார்.

News April 27, 2025

நெல்லை: விடுமுறையில் சிறுவர்களின் விபரீத விளையாட்டு

image

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லையில் சிறுவர்கள் வெயிலையும் கவனிக்காமல் பொது இடங்களில் கூடி விளையாடி வருகின்றனர். மேலப்பாளையம் ரயில் நிலையம் பகுதியில் இன்று சில சிறுவர்கள் தண்டவாளத்தில் சிறிய ஜல்லிக்கற்களை அடுக்கி வைத்து அபாயகரமான விளையாட்டு விளையாடுகின்றனர். இதை அங்கு வந்த ரயில் பயணங்கள் சங்கத்தினர் கண்டித்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!