News September 3, 2025
நெல்லையில் ஊரக வளர்ச்சி துறையில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளையங்கோட்டை, வள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள ஈப்பு ஓட்டுனர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
நெல்லை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News March 10, 2026
நெல்லை: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

நெல்லை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
22,601 பேர் நெல்லை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை 11ம் தேதி புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 96 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 22,601 பேர் இந்த தேர்வு எழுத உள்ளனர். இதில் 11,243 பேர் மாணவிகள் ஆவர் 11,358 பேர் மாணவர்கள் ஆவர் என சிஇஓ சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


