News March 11, 2025

நெல்லையில் இருந்து சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

image

நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் நேற்று சென்றது.கடம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தங்கம்மாள்புரம் கேட் பகுதியில் ரயில் சென்ற போது C-1 பெட்டியில் மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதனால் பயங்கர சத்தம் கேட்டது ஜன்னல் கண்ணாடியும் உடைந்தது. ரயில்வே கார்டு மதுரை ரயில்வே கண்ட்ரோலுக்கு தகவல் கொடுத்துள்ளார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News August 24, 2025

நெல்லை மாவட்டத்தில் 3 மாதத்தில் 3 கொலைகள் தடுப்பு

image

நெல்லை மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் எல்லைகளில், சதித்திட்டத்துடன் திட்டமிடப்பட்ட இரண்டு கொலைகளை ஜூன் மாதம் காவல்துறை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்தது. இதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் 19 போலீசாருக்கு விருது வழங்கினார். நேற்று களக்காடு அருகே 5 பேரை கைது செய்ததால் மற்றொரு கொலை தடுக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் நெல்லையில் 3 கொலை முயற்சிகள் தடுக்கப்பட்டன.

News August 24, 2025

நெல்லையில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.

News August 24, 2025

நெல்லை: நம்ம ஊரு கலெக்டரை அழைக்கலாம்!

image

நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 97865 66111 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462-2501222. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!