News January 24, 2025
நெல்லையில் இன்று மனித உரிமை ஆணையர் விசாரணை

வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் இன்று (ஜன-24) வழக்குகள் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
நெல்லை: 21 போக்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை – எஸ்.பி

நெல்லை மாவட்டத்தில் 2025ம் வருடத்தில் மட்டும் இதுவரை 20 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பாகஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்டார்.
News September 19, 2025
நெல்லை: வீடுகளில் தொடர் கொள்ளை – மக்களே உஷார்

நெல்லை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின் பேரில் இரவு நேர கண்காணிப்பை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த ஒரு மாதத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை, கொள்ளை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 கிராம் தங்க நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையாளர் தெரிவித்தார்.
News September 19, 2025
நெல்லை மாணவர்கள் சாதனை!

நெல்லை என்.சி.சி மாணவர்கள் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை; 50வது தமிழக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். நெல்லை 5 தமிழக பட்டாலியன் என்.சி.சி., மாணவர்கள் 3 பேர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றனர். பாளை., தனியார் கல்லூரி மாணவி பிரியங்கா 3பி ஓபன் சைட் ஜூனியர் பிரிவில் தங்கபதக்கம், புரோன் ஓபன் சைட்டில் வெண்க லபதக்கம் வென்றார்.