News September 15, 2025

நெல்லையில் இன்று அன்பு கரங்கள் திட்டம் தொடக்கம்

image

பெற்றோரை இழந்து உறவினர்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதார தேவைக்கு மாதம் 2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து இன்று காலை பாளை நேருஜி கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுகுமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 15, 2025

நெல்லை: மாணவர்களுக்கு புதிதாக திறன் வினாத்தாள்

image

காலாண்டு பொதுத் தேர்வு 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் இன்று தொடங்கியது. இட்டேரி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் தேர்வை ஆர்வமாக எழுதினர். இதில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முதல் முறையாக “திறன்” என்ற தலைப்பில் சிறப்பு வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டது. மெல்ல கற்க்கும் மாணவர்களை ஊக்குவிக்க கல்வித்துறை முதல் முறையாக இந்த நடைமுறை அமல்படுத்ததியது.

News September 15, 2025

நெல்லை: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்க <>க்ளிக் <<>>செய்து வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பியுங்க. டிகிரி முடித்தவர்களுகு SHARE செய்து உதவுங்க.

News September 15, 2025

நெல்லை: குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

image

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் (34), குழந்தை இல்லாத மனவேதனையால் விரக்தியில் நேற்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி இந்துமதி, உறவினர்களுடன் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்துமதியின் புகாரின் பேரில் விஜயநாராயணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!