News August 5, 2025

நெல்லையில் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அரசு சார்பில் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண்கள் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்கு www.tnuwwb.tn.gov.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெருமாள்புரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT

Similar News

News August 5, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும் இன்று (ஆக.04) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News August 5, 2025

கவின் கொலை – பட்டியலின ஆணையம் நெல்லை வருகை

image

பாளை கேடிசி நகரில் கடந்த 27ம் தேதி ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டார். கவின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய பட்டியலின ஆணையம் இன்று நெல்லை வந்துள்ளது. ஆணைய தலைவர் கிஷோர் மக்குவானா நெல்லையில் இரண்டு நாள் முகாமிட்டு இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் ஆலோசனை நடந்து வருகிறது.

News August 4, 2025

காவல்கிணறு பெயர் வந்தது எப்படி தெரியுமா?

image

காவல்கிணறு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது திருநெல்வேலியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊர் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். காவல்கிணறு என்ற பெயர் வரக் காரணம், அந்தக் கிணறு ஒரு காலத்தில் ஊருக்கு காவல் தெய்வமாக இருந்திருக்கிறது. அதனால் தான் அதற்கு காவல் கிணறு என்று பெயர் வந்தது.

error: Content is protected !!