News September 12, 2024
நெல்லையில் ஆசிரியர்கள் இருவர் போக்சோவில் கைது

பாளையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் ராபர்ட், நெல்சன் ஆகிய இருவர் 7ம் வகுப்பு மாணவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை ஏற்படுத்தியதாக நேற்று காவல் நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 ஆசிரியர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று(செப்.11) இரவு கைது செய்தனர்.
Similar News
News July 4, 2025
நெல்லையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை மாநகர வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நாளை ஜூலை 5ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கல்லூரியில் வைத்து பிற்பகல் 12:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்த முகாமிற்கான ஆயத்த பணிகளை கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர். *ஷேர் பண்ணுங்க
News July 4, 2025
நெல்லையில் அவசர உதவி எண் அறிவிப்பு

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கூட்டத்தில் யாராவது தவறினால் தகவல் தெரிவிக்கவும், உதவி செய்யவும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 100, 0462 – 25 62 651 மற்றும் டவுன் காவல் நிலைய எண் 9498101726 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 8, 2025
நெல்லை மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி

நெல்லையில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நெல்லை மாவட்டம் தமிழக அளவில் 16ஆம் இடத்தை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 187 பள்ளிகள் உள்ளன. இதில் 4 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 5745 பேரில் 5318 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.