News February 28, 2026
நெல்லையப்பர் தெப்ப திருவிழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் மாசி மக அப்பர் தெப்பத் திருவிழா வருகிற 2ம் தேதி இரவு ஏழு மணிக்கு நடைபெறும் என கோவில் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் இரவு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள பொற்தாமரை குளத்தில் அப்பர் தெப்ப பவனி, நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அப்பருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும்.
Similar News
News March 2, 2026
நெல்லை ரயில் பயணிகள் கவனத்திற்கு! முக்கிய மாற்றம்..

மதுரை கோட்ட ரயில்வே பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை வழியாக செல்லும் ஈரோடு -செங்கோட்டை விரைவு ரயில் 3 10 17 மற்றும் 24 தேதிகளை தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல்- மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-நெல்லை -மும்பை விரைவு ரயில் 5, 8, 12, 15, 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் மானாமதுரை காரைக்குடி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
நெல்லை: ரயிலில் தவறி விழுந்தவர் பரிதாப பலி

குமரியை சேர்ந்த டார்லிங் ஜோஷ் (37) கடந்த 23ம் தேதி சென்னை – குமரி ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் நெல்லை சந்திப்புக்கு வந்தபோது அவருடைய பை மட்டும் இருந்துள்ளது. உடனே அவரை தேடிய ரயில்வே போலீசார் அவர் மயங்கிய நிலையில் தூத்துக்குடி மணியாச்சி ரயில்பாதை அருகே கிடந்ததை கண்டு அவரை மீட்டு நெல்லை G.H-க்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
News March 2, 2026
நெல்லை இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று மார்ச் 1ம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.


