News September 3, 2025
நெய்வேலி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

நெய்வேலி போலீஸ் ஏட்டு ராஜா கடந்த 28.08.2025 அன்று கார் ஓட்டிக்கொண்டு சென்றபோது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இந்த விபத்தில் கோவிந்தராசு மனைவி தங்கமணி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் நடந்து கொண்ட ராஜாவை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் இன்று உத்தரவிட்டார்.
Similar News
News September 5, 2025
கடலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

கடலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News September 5, 2025
கடலூர்: 6 போலீசார்கள் பணியிடை நீக்கம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், போலீசார்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் கார்த்திக் ஆகிய 6 பேரையும், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி உமா பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
News September 4, 2025
கடலூர் மக்களே.. இனி அலைச்சல் இல்லை!

கடலூர் மக்களே..சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி <