News February 12, 2026

நெய்வேலி: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

image

நெய்வேலி அடுத்த காட்டுக்கூனங்குறிச்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (60). இவர் மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அந்த பெண் 8 மாத கர்ப்பமானார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணிராஜை கைது செய்தனர்.

Similar News

News February 17, 2026

கடலூரில் இயல்பை விட அதிகம் பெய்த மழை!

image

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 17ம் தேதி வரை இயல்பாக 34.3 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இன்று வரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மழை இயல்பை விட 7 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று (பிப்.17) அறிவித்துள்ளது.

News February 17, 2026

கடலூர் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்

image

கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் இன்று (பிப்.17) சிறை அலுவலர் பிரகாஷ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள தொகுதி 16 பகுதியில் உள்ள பலா மரத்தடியில் ஒரு செல்போன் கிடந்தது. இதை பார்த்த போலீசார், அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார், செல்போனை பயன்படுத்தியது யார்? என விசாரித்து வருகின்றனர்.

News February 17, 2026

கடலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!