News July 22, 2024
நெமிலி தாலுகா கிராமங்களில் தங்கும் ஆட்சியர்

நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வரும் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற இருக்கிறார். அப்போது பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், கழிவுநீர், கால்வாய், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறார். அன்று இரவு ஏதேனும் ஊரில் தங்கி இருந்து மறுநாள் காலை நெமிலி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆய்வு செய்கிறார்.
Similar News
News November 9, 2025
காவலர் தேர்வு மையங்களை அதிகாரிகள் ஆய்வு

இன்று (நவ.09) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. தேர்வு மையங்களை காவல்துறை துணை தலைவர் Z. ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
News November 9, 2025
ராணிப்பேட்டை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க!

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க
News November 9, 2025
ராணிப்பேட்டை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).


