News December 19, 2024

நூலக வாசகர் வட்டம் சார்பில் வினாடி-வினா போட்டி

image

கன்னியாகுமரி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் வினாடி-வினா போட்டி, பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை இம்மாதம் 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகின்றன. முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

குமரி: பாஜக கவுன்சிலர் உட்பட 12 பேர் மீது வழக்கு

image

நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை தொங்கவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஐரின் சேகர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் மாநகர பாஜக கவுன்சிலர் சுனில் மற்றும் ராஜா உட்பட 12 பேர் மீது நாகர்கோவில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 3, 2026

நாகர்கோவிலில் பா.ஜ.க.,வினர் மீது வழக்குப் பதிவு

image

நாகர்கோவிலை அடுத்துள்ள தம்மத்துக் கோணம் சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் ராகுல்காந்தியின் உருவ பொம்மை தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக நாகர்கோவில் மேற்கு மாநகரத் தலைவர் சதீஷ் உட்பட சிலர் மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 3, 2026

குமரி: எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

image

மதுரை, புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) நிரப்பப்பட உள்ள 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.9,300 – 34,800 வழங்கப்படும் நிலையில் இது குறித்த முழு விவரங்களை <>இங்கே கிளிக் <<>>செய்து தெரிந்துகொள்ளலாம்.

error: Content is protected !!