News July 12, 2024

நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

image

தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் நேற்று(ஜூலை 11) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு துளி 2 அதிக பயிர் திட்டத்தில், 1890 நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.2.5 கோடி, நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம், இதர விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படுகிறது. இதனை சிறு, குறு விவசாயிகள் பெற்று பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

தருமபுரி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

image

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

தருமபுரியில் கத்திரிக்காய் தொடர் விலை உயர்வு

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர்-1ஆம் தேதி ஒரு கிலோ கத்திரிக்காய் ₹50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நவம்பர்-5 தருமபுரி உழவர் சந்தையில் தக்காளி வரத்து சரிவு காரணமாக, ஒரு கிலோவிற்கு ₹15ரூபாய் வரை விலை உயர்ந்து. 1 கிலோ கத்திரிக்காய் ₹65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

News November 5, 2025

தருமபுரி: அரசு மருத்துவமனையில் புதிய வரவு!

image

தருமபுரி மாவட்டம், பென்னாகர வட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு புதிதாக நவீன பெட் அமைக்கப்பட்டது. இவ்வகையான பெட்டுகள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்ற வகையிலும், குழந்தைகளுக்கு ஏற்றவாறு எந்த வகையிலும் இந்த பெட்டை பயன்படுத்த முடியும். மேலும் அவசர காலத்தில் பெட்டுகளை ஸ்ட்ரக்சர் ஆகவும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!