News August 8, 2024
நீலகிரி: 2 மாதத்தில் 3 யானைகள் பலி

கூடலூர்: தொரப்பள்ளி தேன்வயல் பகுதியில் கடந்த ஜூலை 7ஆம் தேதி யானை ஒன்று சேற்றில் சிக்கி உயிரிழந்தது. பின்னர், 30ஆம் தேதி மச்சிகொல்லி பகுதியில் மரம் சரிந்து மின் கம்பியில் சிக்கி இன்னொரு யானை இறந்தது. தற்போது ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் மின் கம்பியால், மற்றொரு யானை பலியானது. இப்படி கடந்த 2 மாதத்தில் 3 யானைகள் பலியான சம்பவம் விலங்கு ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது.
Similar News
News September 16, 2025
அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டம், உதகைக்கு வருகை புரிந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் மு.வாசிம் ராஜா மற்றும் உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
News September 16, 2025
நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில், உதகையில் வரும் 19ம் தேதி, காலை 10 மணி முதல், சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கூடலுார், ஓவேலி, குண்டம்புழா வனப்பகுதிகளில் உலாவரும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் பாண்டியர் டான்டீ தேயிலை தோட்டம் வழியாக வருகின்றன. பின், இரும்புபாலம், பால்மேடு, மரப்பாலம், ஆமைக்குளம் வழியாக சாலையை கடந்து கூடலுார் – கோழிக்கோடு சாலையை இரவு மற்றும் காலை நேரத்தில் காட்டு யானைகள் கடந்து செல்வதால், ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,’ என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.