News December 15, 2025
நீலகிரி: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

நீலகிரி மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 19, 2025
நீலகிரி: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
கண்காணிப்பு வலையத்துக்குள் பந்தலூர்!

பந்தலூர் புஞ்சை வயல் கிராமத்தில் வனச்சரகர் ரவி மேற்பார்வையில், வனவர் ஆனந்த், வனக்குழுவினர், இப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன், ‘பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல வேண்டாம், பள்ளிச் செல்லும் மாணவர்கள் பெற்றோர் துணையுடன் செல்ல வேண்டும்,’என, அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அந்த பகுதியில் வனக்குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
News December 19, 2025
நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. நாட்டில் வீசி வரும் குளிர் காற்று, தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று (டிசம்பர் 19) உறைபனி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் குளிருக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


