News October 17, 2025

நீலகிரி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கோரினர்.

Similar News

News October 18, 2025

நீலகிரி: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

நீலகிரியில் வசமாக சிக்கிய நபர்: போலீஸ் அதிரடி

image

கூடலூர் அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் அனிபா. நள்ளிரவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டு அனிபா எழுந்தார். பின்னர் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சசமயம் வாலிபர் தப்பி ஓடினார். இது குறித்து அனிபா கூடலூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருட முயன்ற அதே பகுதியை சேர்ந்த ஷெரீப் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News October 18, 2025

நீலகிரி: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

image

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள தனியார் ஆங்கில பள்ளிக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு தடுப்பு போலீஸ் குழுவினர் மோப்ப நாயுடன் விரைந்து சென்று பள்ளி அலுவலகம், வகுப்பறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். பிறகு புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!