News August 23, 2025

நீலகிரி: வாழை தோட்டத்தை சேதம் செய்த காட்டு யானைகள்!

image

புளியம்பாறை பகுதி விவசாயிகள், ஓணம் பண்டிகைக்கு முன், வாழை தார்கள் அறுவடை செய்ய உள்ளனர். காட்டு யானைகள், நுழைவதை தடுக்க தோட்டத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் முகாமிட்ட காட்டு இரண்டு யானைகள், வாழை மரத்தை ஒன்றை, சோலார் மின் வேலி மீது சாய்த்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்வுடன், கம்பியை லாவகமாக கடந்து, தோட்டத்தில் நுழைந்து,வாழை மரங்களை சேதம் உட்கொண்டு சென்றுள்ளன.

Similar News

News August 23, 2025

பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் உணவு வினியோகிக்கும் உணவகங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதால்,வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மற்றும் பொருட்களை பயன்படுத்தும் சிறந்த உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ஒரு லட்சம் ரூபாயுடன் விருதும், தெருவோர,சிறு வணிகர்கள் 50,000 ரூபாய் விருதும் வழங்கப்பட உள்ளது.

News August 23, 2025

நீலகிரியில் இலவச வக்கீல் சேவை!

image

நீலகிரி மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ▶️நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 23, 2025

நீலகிரி: நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு!

image

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி, துணை மின் நிலையங்களில் (ஆக.25) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. கோத்தகிரி, கப்பட்டி, உல்லத்தி, கேர்பென், குண்டாடா, ஓரசோலை, தட்டப்பள்ளம், குஞ்சப் பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, கரிக்கையூர், கோயில்மட்டம், குல்லங்கரை, செம்மனாரை, கெரடாமட்டம், கோடநாடு, ஈளாடா, தேனாடு, ஓன்னட்டி, மஞ்சமலை, கரிக்கையூர், ஆகிய பகுதிகளில் இருக்காது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!