News December 30, 2024
நீலகிரி: ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மூலை முடக்குகளில், எங்கு பார்த்தாலும், தொடர் விடுமுறை காரணமாக நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் மலை ரயிலில் வரும் நண்பர்களையும், உறவினர்களையும் வரவேற்று கூட்டி செல்லவும், செல்பவர்களை வழி அனுப்பி வைக்கவும் கேத்தி ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Similar News
News November 15, 2025
JUSTIN குன்னூரில் மின்சாரத்துறை முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதலா துணை மின் நிலையத்துக்கு பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, குன்னூர் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுவதாக, மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல் மின் வினியோகம் தொடர்ந்து இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 15, 2025
நீலகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

குன்னூரில் உள்ள ஜகதலா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னூர் நகரம் சிம்ஸ் பார்க் அருவங்காடு ஒசட்டி பாய்ஸ் கம்பெனி,ஓட்டு பட்டறை, ராஜாஜி நகர், காட்டேரி, மவுண்ட் பிளசென்ட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
குன்னூர் மக்களே: கவனமா இருங்க!

குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையோரங்களில், 3மாதங்களுக்கு பிறகு யானை கூட்டம் தற்போது மீண்டும் பர்லியார் பகுதிக்கு வர துவங்கியுள்ளன. நேற்று காலை, 7மணியளவில், பார்லியார் அருகே சாலை ஓரத்தில் 2குட்டிகளுடன், 6 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இவை பர்லியார் குடியிருப்பு மற்றும் மலைப் பாதையில் உலாவரும் என்பதால் மக்கள அச்சத்தில் உள்ளனர். மித வேகத்தில் வாகனங்களை இயக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


