News September 10, 2025
நீலகிரி: மின்துறை சார்ந்த பிரச்னையா?

உதகை நகரில் ஆவின் வளாகத்தில் அமைந்துள்ள நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 12 தேதி முற்பகல் 11 மணி முதல் முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. அப்போது மின் நுகர்வோர்கள் மின் கம்பம் மாற்றம், மின் அபாயம் போன்ற பல்வேறு குறைகளை தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் கால் சேகர் தெரிவித்துள்ளார் .
Similar News
News September 11, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News September 11, 2025
உதகையில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா தலைமையில் வாராந்திர குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். மேலும் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News September 11, 2025
நீலகிரி: கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கமர்சியல் சாலையில் அமைந்துள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து வந்த துணைப் பதிவாளர் மரு.தே.சித்ரா இணை பதிவாளராக இன்று நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.