News April 22, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் மலைப்பகுதியில் வாழும் திருநங்கைகளும், திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்படும் அடையாள அட்டையுடன், சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க ஏதுவாக விடியல் பயணத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அடையாள அட்டை கொண்டு விடியல் பயணத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 16, 2025
நீலகிரி: டிரோன் கேமரா மூலம் யானைகள் விரட்டியடிப்பு

நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் இரவு நேரத்தில், இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. வனத்துறையினர் அவைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை சாலை மற்றும் குடியிருப்புக்குள் நுழையும் ஆபத்து இருந்ததால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து டிரோன் கேமரா பயன்படுத்தி அதிலிருந்து ஒலி எழுப்பி யானைகளை அம்பலமூலா வழியாக முதுமலை வனப்பகுதிக்கு விரட்டினர்.
News August 16, 2025
நீலகிரி: அரசுப் பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (ஷேர் பண்ணுங்க)
News August 16, 2025
நீலகிரி நகரமன்ற தலைவர்: அமைச்சரிடம் கோரிக்கை மனு

நீலகிரி, குன்னுார் நகர மன்ற தலைவர் சுசிலா திருச்சியில் உள்ள நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தில் நேரில் சென்று நேர்முக உதவியாளர் மணிகண்டன் சந்தித்து குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கு அடிப்படை தேவைகளான தடுப்புச் சுவர், நடைபாதைகள் மற்றும் அனைத்து பணிகள் செய்து தர கோரிக்கை மனு அளித்தார்.