News October 22, 2025
நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கி தீவிரமாக உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக பல இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சில பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 22, 2025
உதகை புத்தக கண்காட்சி: கலை நிகழ்ச்சிகள் விவரம் அறிவிப்பு!

ஊட்டியில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நான்காவது புத்தக கண்காட்சி வரும் 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முக்கிய சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். பல்வேறு பதிப்பகங்கள் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளன. இந்நிலையில் கண்காட்சிகள் நடைபெறும் கலை குழுக்களின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
News October 22, 2025
நீலகிரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 22, 2025
நீலகிரி: டிகிரி போதும் ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

நீலகிரி பட்டதாரிகளே, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <