News September 18, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்களில் 19 வயதை கடந்தும் முதிர்வு தொகை பெறாதவர்களின் பெயர் பட்டியல் nilgiris.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே முதிர்வு தொகை பெறாதவர்கள் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகையில் இயங்கும் அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
Similar News
News September 18, 2025
நீலகிரியில் காட்டு யானை அட்டகாசம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூ ஹோப் கிளை நூலகத்தை இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று நூலகத்தின் கதவை சேதப்படுத்தி உள்ளது. உணவு தேடி வந்த யானை கதவை சேதப்படுத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நூலகத்தின் கதவை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் யானை உணவு தேடி வரலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
News September 18, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் 5 திட்டங்களுக்கு இ-சேவை வழியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை போன்றவற்றை http://www.tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை உடனடியாக மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 18, 2025
நீலகிரி: மரம் வெட்ட அனுமதிக்கு அலைய வேண்டாம்!

நீலகிரி மாவட்டத்தில் பட்டா உள்ள நிலங்களில் மரங்களை வெட்ட அனுமதி கோர http://
www.nilgiristreecuttingpermissons.org/ என்ற இணைய தளபக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க பட்டதும், அவை குழுவினரால் புலத்தணிக்கை செய்யப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன. மேலும் மரங்களை வெட்ட அனுமதி வழங்கும் உத்தரவும் இணையதளத்திலேயே வழங்கப்படும்.