News December 26, 2025
நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், அத்தியாவசிய பொருட்கள் பெறும் ஏஏஒய் மற்றும் பிஎச்எச் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அடையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை, வரும் (31/12/2025)-க்குள் ரேஷன் கடையிலுள்ள பிஓஎஸ் இயந்திரத்தில் பதிவு செய்யுமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.
Similar News
News December 26, 2025
நீலகிரி: அச்சத்தில் பொதுமக்கள்!

பந்தலூர் அருகே கூவமூலா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆட்டை பகல் நேரத்தில் சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் இங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது, மீண்டும், குடியிருப்பு, சாலை பகுதிகளில் தினசரி சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் கோரியுள்ளனர்.
News December 26, 2025
உதகை தலைகுந்தாவில் -2°C பதிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று அதிகாலை தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°C ஆக குறைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது வெண்மையான பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.
News December 26, 2025
உதகை தலைகுந்தாவில் -2°C பதிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று அதிகாலை தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°C ஆக குறைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது வெண்மையான பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.


