News November 16, 2024
நீலகிரி பேராசிரியருக்கு அமெரிக்க பல்கலை. விருது

நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த பேராசிரியர் அசோக்குமார். இவர் சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தின் துறை தலைவராக உள்ளார். புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றல், திரவம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கார்பன் டை ஆக்சைடு குறைப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் சிறந்த விஞ்ஞானிக்கான விருதை வழங்கியுள்ளது.
Similar News
News March 2, 2026
நீலகிரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

நீலகிரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 2, 2026
கூடலூரில் கருப்புக் கொடி கட்டும் அதிமுக கூட்டணிக் கட்சியினர்!

கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ‘பிரிவு 17’-ன் கீழ் வரும் சுமார் 31,500 ஏக்கர் ஜன்மம் நிலங்களை வன நிலங்களாக மாற்றும் தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நடவடிக்கையால் பல தலைமுறைகளாக அங்கு வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அ.இ.அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
News March 2, 2026
நீலகிரி மக்களே முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், நீலகிரி மாவட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே வந்து வழங்கப்படவுள்ளன. இன்று மார்ச்.02 (திங்கட்கிழமை) மற்றும் நாளை மார்ச்.03 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இந்தச் சேவையைத் தகுதியுள்ள பயனாளிகள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


