News July 9, 2025
நீலகிரி : பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17008006>>(தொடர்ச்சி 1/2)<<>>
Similar News
News July 9, 2025
நீலகிரியில் வேலை வாய்ப்பு!

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 50, Development manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
News July 9, 2025
நீலகிரியில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியீட்ட செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மாவட்டம் மைய நூலகம், சோகத்துறை சமுதாயக்கூடம், கூடலூர் ஜெயம் கல்வி நிலையம் ஆகிய இடங்களில் பயிற்சி கட்டணமின்றி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 9597874742ஐ அழைக்கவும்.